
மதுவை தொடர்ந்து குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் , உண்மையில் மதுவால் வயிறு ( இரைப்பை ) தான் முதலில் பாதிப்பிற்கு உள்ளாகும் . இரைப்பை என்பது ஒரு சதைப்பை . அதனால் மதுவால் ஏற்படும் எரிவு நிலையை ( irritating feeling ) தாங்க முடியாது .
இரைப்பை என்பது , உணவை செரிப்பதற்காக சுருங்கி விரியக் கூடியது . அதன் உட்புறத்தில் பல ஜீரண என்சைம்கள் சுரக்கும் . அக்குபங்சர் தத்துவத்தில் , வயிறு என்பது கவலை என்ற உணர்ச்சிக்கு உரியது .
இரைப்பை பாதிக்கப்படும்போது , கவலை / பொறுமையின்மை / மன அழுத்தம் போன்றவை அதிகமாகும் . இந்த மனநிலைகள் அதிகமாக அதிகமாக , இரைப்பை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் . ( vicious cycle )
இதற்கு அடுத்த கட்டத்தில் தான் , கல்லீரல் சேதமடைய துவங்கும் .
நோயாளி பொறுமையும் , ஒத்துழைப்பும் கொடுத்தால் – அக்குபங்சர் சிகிச்சை மூலம் படிப்படியாக இதை குணமாக்கி விட முடியும் .
அக்குபங்சர் சிகிச்சை, உறுப்புகளை உயிர் பெறச் செய்கிறது !
அக்குபங்சர் மருத்துவம் , மனித உடலில் எப்படி வேலை செய்து நோய்களை குணமாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள பொது மக்கள் சிரமப்படுகிறார்கள். அக்குபங்சர் மிக எளிதானது தான் .
உதாரணமாக , Lr – 2 என்று ஒரு அக்குபங்சர் புள்ளி . இந்தப் புள்ளியில் மென்மையாக அழுத்தம் தரும்போது , ” கல்லீரல் மற்றும் இதயம் ” என்ற இரண்டு உறுப்புகளும் இயக்கம் பெற துவங்குகின்றன .
ஒவ்வொரு முக்கிய உறுப்பும் , ஒரு துணை உறுப்புடன் இயங்குகிறது .
எனவே , Lr – 2 என்ற புள்ளியை தூண்டும் போது ” கல்லீரல் , இதயம் , சிறுகுடல் , பித்தப்பை ” என்ற நான்கு உறுப்புகளும் ஒரே நேரத்தில் உயிரோட்டம் பெற்று செயல்பட துவங்குகின்றன .
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.